நத்தம், பிப். 12: ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்னும் தேர்தல் பரப்புரைக்காக வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு நத்தம் எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திமுக துணைப்பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் அர.சக்கரபாணி எம்எல்ஏ, கிழக்கு மாவட்ட செயலாளர் ஐபி செந்தில்குமார் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட பொருளாளர் ஆண்டி அம்பலம் எம்எல்ஏ, எம்பி வேலுச்சாமி, மாநில செயற்குழு உறுப்பினர் விஜயன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர்கள் ரத்தினகுமார் (நத்தம் தெற்கு), பழனிசாமி (வடக்கு பொறுப்பாளர்), தர்மராஜன் (சாணார்பட்டி தெற்கு), மோகன்(சாணார்பட்டி வடக்கு), நெடுஞ்செழியன் (திண்டுக்கல்) மற்றும் நத்தம் நகர் செயலாளர் முத்துக்குமாரசாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பதுருஸ்சமான், மாவட்ட பிரதிநிதி இஸ்மாயில், வடக்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் அழகர்சாமி, சிவஞானம், சாணார்பட்டி ஒன்றிய குழு தலைவர் பழனியம்மாள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.